லெட் அஸ் கம் டு சாந்தி ஆசனா" யோகாசனப்பயிற்சியின் முடிவில் இந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம்....உண்மையில் சாந்தி ஆசனத்தில் உடல் மட்டுமல்லாது உள்ளமும் சாந்தி பெறவேண்டும்...... உ டல் உறுதி பெறுவது மட்டுமே யோகத்தின் இறுதி இலட்சியமல்ல , மனம் அமைதிபெறுவதே இங்கு உயர்வான இலட்சியம் ........ மனம் பல வார்த்தைகளாலும் , காட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது. நமது கம்ப்யூட்டரை வேண்டியநேரத்தில் நிறுத்தவும், இயக்கவும் தெரிந்த நமக்கு, வேண்டியநேரத்தில் நமது மனத்தை நிறுத்தத் தெரிவதில்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓய்வில்லாமல் சதா சலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒளியாற்றலாகிய உயிரும் சதா குறைந்துகொண்டே இருக்கிறது...
இந்த தொடர் மன அசைவிற்கு நமது கல்வி முறையும் ஒரு காரணமாகிறது. . இந்தக் கல்விமுறையால் எப்படி முழுவதுமாக மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே கற்றுத் தரமுடிகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக......... நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுக்க முடிவதில்லை. எனவே இந்த மனம் சிலருக்குத் தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கல்விமுறையால் மனதை முழுவதுமாகப் பயன்படுத்தி ஒரு திறமையான பொறியாளனை உருவாக்க முடிகிறது, ஆனால் மனதை ஓயவு பெறச்செய்து மீண்டும் அவனை இயல்பான மனிதனாக்க முடிவதில்லை....
நம்மால் மனத்தை ஓய்வுபெறச் செய்வது எப்படி???எனக்கற்றுக் கொடுக்க முடிந்தால்...... நமது உயிராற்றலை சேமிக்கமுடியும்.....ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதும் சாத்தியம்தான். இந்த விசேஷக் கல்வி முறையைத்தான் "யோகம்" என்கிறோம்.... . யோகக் கல்வியால் மனம் தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும்.
1 comment:
The benefits accrued by being a regular practitioner are numerous. Some very discernible ones are:
Improves health
Gives mental strength
Increases physical power
Protection against injury
Detoxifies the body
yoga tips for weight loss
Post a Comment