நிதமும் நீ கடந்து போன ஒவ்வொரு நொடியும் எனக்குத் திரும்பி கிடைக்காதாவென ஏக்கத்துடனே கடந்து போகிறேன்.....!!!!
விடியலில் ஆரம்பிக்கும் உன்னின் துரத்தல் நன்பகல் பகல் பிற்பகலென விரிந்தே என்னையும் உன்னோடு சேர்த்து கொண்டே.....!!!!
எப்போதுமே என்னுடன் பயணிக்கிறாய்
இருட்டில் கூட மறைந்து போகும் எந்தன்
நிழலும் இன்னொரு முகமானதாய்....!!!!
இருட்டில் கூட மறைந்து போகும் எந்தன்
நிழலும் இன்னொரு முகமானதாய்....!!!!
நொடி வினாடி நிமிடத்தில் ஜனித்தே
மணியாய் நாளாய் வாரமாய் மாதமாய்
வருடமாய் என்னின் வரமாய்.....!!!!
மணியாய் நாளாய் வாரமாய் மாதமாய்
வருடமாய் என்னின் வரமாய்.....!!!!
பிறிதொரு நாளின் துவக்கத்தில் எனக்குள்
அவதியும் அவசரமும் படபடப்புமாய்
தவிப்பும் சேர்த்தே உன்னை உணரவைத்தாயே....!!!!
அவதியும் அவசரமும் படபடப்புமாய்
தவிப்பும் சேர்த்தே உன்னை உணரவைத்தாயே....!!!!
ஒவ்வொரு நாளும் என்னை அழகுபடுத்துகிறாய்
அடுத்தொரு நாளில் என்னை அவதிக்குள்ளாக்கியே
பிறப்பின் தவத்தை எனக்குள் புகட்டினாயே..!!!!!
அடுத்தொரு நாளில் என்னை அவதிக்குள்ளாக்கியே
பிறப்பின் தவத்தை எனக்குள் புகட்டினாயே..!!!!!
வருடங்கள் நகர நகர என்னுள் ஒரு பெரியதோர்
மாற்றமதை நிகழ்த்திவிட்டு நகர்ந்து விடுகிறாய்
ஏதுமறியா கள்வனாய் அருவமாய் அகன்றே....!!!!
மாற்றமதை நிகழ்த்திவிட்டு நகர்ந்து விடுகிறாய்
ஏதுமறியா கள்வனாய் அருவமாய் அகன்றே....!!!!
காலமே உன்னை வணங்குகிறேன் ஒவ்வொரு
நாளும் என்னைப் புதுப்பித்தே வழியனுப்புகிறாய்
எனக்குள் இருக்கும் வலிகளை வடிகட்டியே....!!!!
நாளும் என்னைப் புதுப்பித்தே வழியனுப்புகிறாய்
எனக்குள் இருக்கும் வலிகளை வடிகட்டியே....!!!!
எதையும் தாங்கும் வலிமையதை வலியால்
உணர்த்தியே என்னை இறுக்குகிறாய்
இறுகிப் போகிறேன் இறுமாப்பாய்/...!!!!
உணர்த்தியே என்னை இறுக்குகிறாய்
இறுகிப் போகிறேன் இறுமாப்பாய்/...!!!!