Total Pageviews

Wednesday, May 23, 2012

பயமே மரணம்....



மரணத்தைக் குறித்து
எந்த பயமும் எனக்கில்லை!
பூவின் மீது எழுந்த
பனித்துளியாய்
பொழுதுகளை கரைத்து விடுவேன்!


நிலவின் சின்ன
ஊழிக்காற்றில்
இரவுகளைக் கடந்து விடுவேன்!


சூரியனின்
உக்கிரமான சினேகத்துடன்
மதிய வேளைகளை
மயக்கி விடுவேன்!


எப்படியேனும்
இந்த வாழ்வை முழுதாய்
வாழ்ந்து விடுவேன்!


இப்பொழுதும் சொல்கிறேன்-எனக்கு
மரணம் குறித்து
துளியும் பயமில்லை
அந்த பனித்துளியைப் போல!


மரணம் எதுவெனில்


எனக்குத்தெரியும்
பயம் தான் மரணமென்று!!

No comments:

Post a Comment