Total Pageviews

Saturday, April 7, 2012

கேள்வியின் பிறப்பிடம்


சாரிபுத்தர் என்பவர் ஞானம் பெறப் புத்தரைத் தேடி வந்தார்.

புத்தர் சொன்னார்.., ''உன் மனதில் ஏராளமான கேள்விகள்..., எண்ணற்ற சந்தேகங்கள்..., உன் மனம் அலை பாய்கிறது.. நீ என்னுடன் இரு, ஒரு வருடம் எதுவும் பேசாது மெளனமாக இரு.., அடுத்த ஆண்டு உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில் சொல்வேன்..!''


சாரிபுத்தர் மெளனமானார். அன்று முதல் ஏதும் பேசுவதேயில்லை. ஓராண்டு கழிந்தது..! ''சாரிபுத்தா..! உன் கேள்விகளைக் கேள்,'' என்றார் புத்தர்..! ''கேட்க ஏதுமில்லை..!'' என்றார் சாரிபுத்தர். ஆம்.. அவர் ஞானம் பெற்றுவிட்டார்.


(மனமே கேள்வியின் பிறப்பிடம்.. பதிலும் அங்கேதான் இருக்கிறது..மெளனத்தின் கதவுகள் திறக்கும் போது.. அங்கு நிறைந்த ஆரவாரங்களும் ஐயங்களும்.. மறைந்து விடுகின்றன..!)

No comments:

Post a Comment