Total Pageviews

Tuesday, April 3, 2012

தேன்சிட்டு....

"இன்னைக்கு செம வெயில்னு" சொல்லிக்கிட்டே வீட்டுக்குள் நுழைந்தாள் வேலைக்காரி செல்வி.........


"அம்மா...... வாட்டர் டேங் நிறைஞ்சு தண்ணி வெளிய போகுது ......எங்க இருக்கீங்க"..... கத்தினாள்...


"அய்யய்யோ.....வேலையில கவனமா இருந்ததுல மோட்டர ஆப் செய்ய மறந்துட்டேன் செல்வி .... மோட்டர் சுவிச்ச ஆப் பண்ணிடுமா "...


..........சொன்னவங்க ஜான்சியம்மாள் 


செல்வி முனகிக்கொண்டே மோட்டர் ரூமுக்குள் போனாள்,,


இப்போ போடற வெங்காய வத்தல் ஒரு வருசத்துக்கு வருமுன்னு... சொல்லிகிட்டே மாடியிலிருந்து ஜான்சியம்மா இறங்கி வந்தாங்க..


இந்த வருடம் வெயில் அதிகம்னு தொலைக்காட்சியில் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள் ,


எங்கு நோக்கினும் பவர் கட் பற்றியே பேச்சு ....


ஆனால் எங்களுக்கு எந்த கவலையுமில்ல ,
நாங்க ஜான்சியம்மா வீட்டுக்கு வந்ததிலிருந்து , நோ பவர் கட் ...


அந்த பிரச்னையை டிவி செய்தியில மட்டுந்தான் கேட்போம் 


ஜான்சியம்மா வீடு சூப்பரா இருக்கும் .
நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள்னு வீட்டை சுற்றி
ரொம்ப அழகா இருக்கும் ...


வீட்டை ரொம்ப..சுத்தமா வைத்திருப்பாங்க ஜான்சியம்மா


நாங்க கொஞ்சம் அப்படி இப்படின்னு ,இருந்தா கூட 
செல்விய விட்டுச் சரி செய்யச் சொல்வாங்க..


எங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க ... 


ஆனால் இதுக்கு முன்னாடி நாங்க இருந்த வீடு
ஒண்டிக் குடித்தனம்...நிறைய பிரச்சனைகள் ..நகரத்தில
இருந்தோம் ,அங்கக் காத்துக் கூடச் சரியா வராது ...


நாங்க இருந்த வீட்டுக்கு மாடில செல் போன் கோபுரம்
போடுவதற்கு வந்தாங்க...எங்களைக் காலி செய்ய 
சொல்லிட்டாங்க ..... கஷ்டத்தில ,ஆளாளுக்கு ஒரு
மூலையில இருந்தோம் ...............


கிராமத்துல இருந்து ஒரு மாமா எங்க வீட்டுக்கு வந்தாங்க, இப்படி நகரத்தில
இருந்து என்னத்தை கண்டீங்க....




என்னோட பேச்சைக் கேளு "தம்பி னு எங்க அப்பா கிட்ட
பேசி ,எங்களை அவர் இருக்கிற கிராமத்துக்குக் கூட்டிட்டு
வந்திட்டாங்க ..


அழகான கிராமம்,அமைதியான ஊர் .. மேலகரம்.....அதிலும் 
நாங்க இருக்கிற ஜான்சியம்மா வீடு நினச்சாலே ரொம்ப 
சந்தோசமா இருக்கு ..




கதவைத் திறக்கிற சத்தம் , ஜான்சியம்மாதான் வர்றாங்க ..






"கண்ணு சீக்கிரமா வா.... சாப்பிடு ..நான் 
திரும்பப் போயிட்டுச் சீக்கிரமா வரேன்....
இல்லேன்னா ஜான்சியம்மா "சாமிக்கு பூ"பறிச்சிட்டு 
போய்டுவாங்க ....அப்புறமா உனக்குப் பிடிச்சத் தேன் கிடைக்காதுடா"
என்றாள் ,என் அம்மா கீச் கீச்...எனும் .........கொஞ்சு மொழியில் ...


அவ எப்பவுமே இப்படித்தான் காலையிலேயே இரைதேடக் கிளம்பி விடுவாள் !!!!!!!




அட என்ன பாக்கறீங்க ...இந்தப் பசுமை மாறா
கிராமத்தில் சிறகடிக்கின்றோம் ..
இன்னும் இருகின்றோம் .கீச் கீச் கீச்...


இங்கு வாழும் மக்கள் இங்கிருக்கும் எங்களை 
போன்றவர்களுக்காக "செல் கோபுரத்தை"
தவிர்த்ததால் இன்னும் இருக்கிறோம் .."நாங்க தேன்சிட்டுக் குருவிகள்தான் " 
வாங்க எங்களையும் கணக்கெடுங்க ....கீச் கீச் ...





No comments:

Post a Comment