உன் விரல் பற்றி
நடந்துதானே
என் முதுகு தண்டு
நிமிர்ந்தது!
நீ தோளில் சுமந்து
காட்டித்தானே
என்னுலகம் என்னில்
விரிந்தது!
வீணான, புறம்
கண்ட எனக்கு.
எனக்குள்ளே
என்னுலகம்
காட்டியவன் நீ!
பாசத்தைத் தாயூட்ட
பக்குவத்தை நீயூட்ட
அன்பை அவள் பகிர
அறிவை நீ பகிர்ந்தாய்!
பத்து மாதம் பாரம்
தாய் சுமந்தாள்
எனை வளர்த்தெடுக்க
இன்னமும் சுமக்கிறாய்
நீ பாரம்.
நீ என்னை கருசுமக்காது
பிரசவித்த
தாயுமானவன்!
வெற்றிபெற்ற
மனிதருக்குப் பின்னால்
ஒரு பெண்ணிருப்பாள்
என்று
ஏடெழுதி போயினர்
ஏராளமானோர் !
உண்மை ஒன்றை
உரக்கச் சொல்வேன்
ஆணித்தரமாய்
அடித்துச் சொல்வேன்
ஒவ்வொரு மனிதனின்
உண்மையான
வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு குருவின் பங்கு
நிச்சயம் உண்டு!
உண்மையான
வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு குருவின் பங்கு
நிச்சயம் உண்டு!
குருவே சர்வ லோகானாம்
5 comments:
குருவே சரணம் .
உணர்வுப் பூர்வமாக குருவருள் உணர்ந்தோம் ,மெய் சிலிர்த்தோம் ,உங்கள் அருளால் ,நன்றி மாஸ்டர்
என்ன சொல்வதென்று தெரியவில்லை?
பனித்த விழிகளுடன்..............
ஓம் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.
thank you for your guidance master
ungal varugaikum varigalukum nandri
Post a Comment