Total Pageviews

Saturday, June 18, 2011

குடல்வால் - உபயோகமில்லாத உடலுறுப்பா?



மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,


குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும்.   எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது,  எதேச்சையாக வயிற்றில் அறுவை சிகிட்சை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் நம்மிடம் சொல்லாமலேயேக் கூட இந்தக் குடல் வாலையும் வெட்டி எடுத்து விடுவார்களாம்.  இந்தக் குடல்வாலின் நன்மைகள் என்ன தெரியுமா?


மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு.

நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டிரியாக்களைச் செழிக்க செய்வதும் கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமமான செயலே.




இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன.   குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன.

ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.  

ஆறு வருடங்களுக்கு முன்பே இதனை பலமுறை நமது யோகவகுப்புகளில் கூறி இருந்தாலும், டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் குடல்வாலின் இதே பயனை-அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

||Although regarded as a vestigial organ but recent studies indicate that the appendix has different functions like immune function, maintaining of gut flora, etc 
Read more: http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix ||
||These researchers at the 'Duke University Medical School' believe they have sufficient evidence to back up their theory, in that the appendix appears to help produce and protect the good bacteria in the intestines. The appendix, they say, acts like a "good bacteria factory" that "cultivates and preserves" good bacteria nutrition to help keep your body healthy. There is much more bacteria (or germs) inside your body than cells. Most of this bacteria that resides inside your body is needed to help you digest, absorb, and eliminate your food. These friendly microbes also provide your skin with a protective barrier. 
Read more: http://www.disabled-world.com/artman/publish/appendix.shtml ||

குடல்வால் ஆட்டுக்குத்தாடியை போல ஒரு அனாவசிய-உறுப்பு அல்ல நண்பர்களே!  நவீன காலத்தில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழும் நம்மவர்களுக்கும் இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருக்கிறது என்பதே உண்மை.  நமது உடல் என்பது மூலப் பிரகிருதியால் தெளிவாகப் படைக்கப்பட்ட ஒரு ஒப்பற்ற இயந்திரம்.  இந்த உடலினுள் உபயோகமில்லாத உறுப்பு என்று எதுவுமே இல்லை நண்பர்களே!  


ஒரு உறுப்பின் உபயோகம் நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அதனை உபயோகமற்ற உறுப்பென அறுத்து விடுவது அறிவுடைமையாகாது.  ஒரு உறுப்பை எடுத்தாலும் உயிர்வாழ முடியும் என்பதற்காக அந்த உறுப்பை அகற்றி விடுவது எந்த வகையில் நியாயம்? குடல்வால்வைப் போலவே மண்ணீரலும்,  டான்சிலும் பரிசோதனைக்கு உட்படுத்தப் படவேண்டிய உடலுறுப்புகளே என்பது எனது கருத்து. 


இந்தக் குடல்வால் ஒரே நாளிலெல்லாம் கெட்டுப்போகாது நண்பர்களே!

குடல்வால் நோயை நமது உடல் குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவே அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது.  உடல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதனை நாம் அலட்சியப் படுத்துகிறோம். விளைவு வேறு வழியில்லாமல் படைப்பின் ரகசியத்தில் அரிதாகக் கிடைத்த குடல்வாலை இழக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.


யோக மருத்துவப் பயிற்சிகளை,   ஆதுரஸ்ய ரோக நிவாரணம், ஸ்வஸ்த ஸம்ரக்ஷணம்,   என இரு வகையாகப் பிரிக்கலாம்.  அதாவது நோய் வந்த பிறகு குணமாக்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள்,  நோய் வருவதற்கு முன்பே ஆரோக்கியத்தை நிலைப் படுத்துவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள்.  இவற்றுள் குடல்வால் நோய்க்காகச் செய்யக்கூடியப் பயிற்சிகள் ,நோய் வருவதற்கு முன்பாகவே செய்யக்கூடிய ஸ்வஸ்த ஸம்ரக்சனம் வகையைச் சேர்ந்தது.
                

பெருங்குடலின் சக்திக்குறைவே குடல் வால் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.    "சர்வ ரோகா மலவாச்சகா" எனக்கூறுவது குடல்வால் அலர்ஜி நோய்க்கு முற்றும் பொருந்தக் கூடிய வார்த்தையாகும்,  மலச்சிக்கலே குடல்வால் அலர்ஜிக்கு முக்கியகாரனமாக அமைகிறது.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது.  தண்ணீர் அதிகம் குடிப்பது. நார்சத்துள்ள உணவுகளை உண்பது போன்ற வாழ்க்கை முறைகளால் குடல்வால் அலர்ஜி வராமல் பர்த்துக்கொள்ளமுடியும்.    

லெட்சைகெட்டக்கீரையை வாரத்திற்கு இரு முறையேனும் உணவாகப்பயன்படுத்தலாம். சுண்டைக்காயையும்,பிரண்டையை-யும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் வால் அலர்ஜி என்ற நோய்க்கு இடம் கொடாமல் வாழமுடியும்.  

அதுவும் சனிக்கிழமைகளில் சுண்டைவற்றல் குழம்பும் பிரண்டைத்துவையலும் வயிற்றிலுள்ள ஆமத்தைக் குறைத்து குடல்வால் அலர்ஜியை விரட்டும்.

மலமிளக்கிகளை அதிகமாகப் பயன்படுத்துவதும் குடல்வால் அலர்ஜி வருவதற்கு ஒரு காரணம் என்பதால் மலமிளக்கிகளைப் பயன்படுத்துபவர்கள்,தங்கள் உடல் பிரகிருதியைக் கருத்தில் கொண்டு செயல்படவும்.  எனிமா கேன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

யோகத்தில் அக்னிசாரக் கிரியையும்,   நெளலிக்கிரியையும் குடல்வால் அலர்ஜியை வரவிடாமல் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆசனங்களில் பவன முக்தாசனம், அபானாசனம் போன்றவை மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்,  நவுக்கானம்,  ஹம்சாசனம் போன்றவை வயிற்றிலுள்ள நோய்த்தொற்றுகளை வெளியேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.   சூஜி முத்திரை, பெருங்குடல் பாதைகளை சுத்தப்படுத்தி அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றும்.  

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.  - திருமூலர்


5 comments:

gayathri said...

குடல் வாலின் முக்கியத்துவத்தை பற்றி கூரியதர்கும்,உடலில் எல்லா உறுப்பும் முக்கியமானதே என்று உணர்த்திய தங்களுக்கு மிக்க நன்றி மாஸ்டர் . எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி .

Yoga Yuva Kendra said...

நன்றி காயத்ரி

Viji Raja said...

master,we need not refer any books to know about anatomy.it is enough to see your blog.it would be useful for us if you write about each organ .thank you for the valuable informations.

AK said...

Rashmi once told me that she came to know in one of your classes that appendix is not a useless organ. This article has explained that concept in detail to people like me who are not fortunate enough to attend your classes and speeches regularly.
Having read the article, there are two questions that come to my mind :
1) You have said that the body sends out signs for atleast a year before appendix becomes too infected to cure. What are those signs and how can a layman like me notice and understand them ?
2) You have also said no part of the human body is useless. So, what is the use/function of hair and nails ?

Thank you Sir,
AK

Radhika said...

you have got it into our heads that no organ of gods creation is useless in our body .thankyou sir.

Post a Comment