Total Pageviews

Thursday, June 2, 2011

பிறவிப் பெருங்கடல்




போன ஜென்மத்தைக் காட்டுகிறேன் வாவென 
புருவப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத் துவங்கியது.

அந்த ஜென்மத்தில்........ 

அடுத்த ஜென்மத்தைக் காட்டுகிறேன் வாவென 
புருவப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.


இப்படியே.......

குருவும் சீடனும் 
பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டார்கள்..!




பல ஜென்மங்களை காட்டுகிறேன் எனக் கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வைக் கொடுப்பவரே குருவாக இருக்க முடியும்.


வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்திபற
வீடு தரலிலை உந்திபற

No comments:

Post a Comment