Total Pageviews

Friday, May 6, 2011

மூக்குப் பொடிச் சித்தர்





பௌர்ணமி, கிரிவலம், ரமண பகவான், சேஷாத்ரி ஸ்வாமிகள், மலை, குரங்கு, மயில்,தீபம், நிஜ மஹான்கள், போலி சாமியார்கள், கொளுத்தும் வெயில், கடும் பனி, குண்டும் குழியுமான தெருக்கள் ..... இது திருவண்ணாமலை.          
பித்தன், பைத்தியம், சித்தன், சாமி, என்று பலரும் இங்கே சுற்றித் திரிவார்கள் .

வெறித்த பார்வை, ராஜநடை, கையில் ஒரு தடித்த கம்பிளி, வெளுத்த தாடி, சிறுத்த உடல், வினோதமான ஆடை, காவிவேஷ்டி மேல் வேறு ஒரு கல்யாண வேஷ்டி,(வெள்ளை வேஷ்டியை ஒரு 10 வருடங்கள் துவைக்காமல் விட்டுவிட்டால் இருக்கும் நிறம், கருப்பு, காபி மற்றும் சிமெண்ட் கலர் கலந்த ஒரு புது நிறம்) சட்டைக்கு பதில் ஒரு ஸ்வெட்டர் சும்மா youth style ல button ஐ அவுத்து விட்டுவிட்டு super ஸ்டார்ஐ மிஞ்சும் அளவுக்கு body language, தோரணை ... (போதும்னு நினைக்குறேன்) இது தான் மூக்கு பொடிச் சித்தர்

திடமான மனம் உள்ளவர்கள் அருகே செல்லலாம்.. சில சமயம் அடி, உதை, கல்லெறி, அசிங்கமான வசவு, முறைப்பு, அரிதாக சிரிப்பு, அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்வது இவரின் பாவனைகள்.

இவரை பற்றி அறிந்தவர் சிலர், அதில் சில பிரபலங்களும் உண்டு. யாராக இருந்தாலும் அடி உதை திட்டு நிச்சயம். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அவர் நினைத்தால் வருவார், விரும்பினால் சாபிடுவார், இல்லையேல் காதில் ரத்தம் வரும் அளவுக்கு திட்டுவார். இவரை தெரிந்தவர்கள் இதை மகிழ்ச்சியாக ஏற்று கொள்வார்கள்.... நல்லது நடக்கும். புரியாத பலர் லூசு, பைத்தியம் என்று நடையை கட்டுவார்கள். சுத்தமான கிராமத்தனத்துடன் இவர் பேசுவார். இப்படி ஒரு ஜீவன் எதற்காக இப்படி சுற்றி வருகிறது? இவரின் பின்னணி என்ன? எங்கே தங்குவார்? எதை சாப்பிடுவர் எப்போது குளிப்பார்? ஒரு பைசா குட இல்லாமல் ஒரு ராஜாவைப் போல சுற்றி திரியும் இவர் பித்தனா? சித்தனா?  சிவமா ????

சிவ தாளம் போட்டு இசை எழுப்பி டமாரம் அடிக்கும் இவரைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்களும் கிரிவலப்பாதையில் சுற்றித் திரிய வேண்டும், WONDERING SWAMY OF ARUNACHALA HILLS என்பதுதான் இவரின் முகவரி. சில சமயம்அலையா விருந்தாளியாக சில விடுதிகள் அல்லது டீ கடையில் ராஜபாட்டை நடத்திக்கொண்டிருப்பார்






சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள்
சித்தரிங்கு இருந்த போது பித்தரென்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்துமென்ன பித்தாயிருப்பீரே
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களக்கெலாமோன்றே.



3 comments:

velvijayan said...

மாஸ்டர் சித்தர்களின் அற்புதங்கள் சிலவற்றை கூறுங்கள்.

Venkat said...

சிவவாக்கியரின் மெய்ஞான புலம்பலோ?

Unknown said...

yes venkat, this is sivavaakiyaar song.

Post a Comment