Total Pageviews

Tuesday, May 31, 2011

தர்மத்திற்கு மரணம்



நண்பர்களே! ..........  ஆத்மபதவி அடைந்த தர்மலிங்கராஜாவின் ஆத்மா சாந்தியடைய யோகயுவகேந்திரா ஆத்மார்த்தமாகப் பிரார்த்திக்கிறது.



ஆம்..... அது நடந்துவிட்டது



இரவு தூங்கும் நேரத்தில்........
கைப்பேசி வழியே
வருகிறது
மரணச் செய்தி ஒன்று


யோக யுவ கேந்திரா
உள்ளத்தின்
பள்ளத்திலிருந்து
துக்கம் பீறிடுகிறது.....


துயரம் சூழ்ந்த
கண்ணீர் துளிகள்
வியாபித்திருக்கிறது
மௌனித்திருந்த
அறையெங்கும்.............


புற்றே
உனக்கு ஒரு
புற்று வந்து
தொலையாதா?
எத்தனை இதயங்களை 
இன்று நீ
காயப்படுத்தி இருக்கிறாய்
என்பதை அறிவாயா?


தங்கத்தை, தர்மத்தை
அல்லவா அழித்திருக்கிறாய்!


பாடை சுமந்தவர்கள்
உள்ளமெங்கும் நிரம்புகிறது
பயம் சூழ்ந்த
துக்கப் பெருவெளியொன்று


இப்பொழுது
நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தின்
இறுதித் துளியை......

தர்மப் பெரியவரே!
உங்கள் அன்பிற்கு அடிபணிகிறது
யோகயுவ கேந்திரா.



1 comment:

AK said...

my association with YogaYuvaKendra is a very recent one and hence I do not know Mr.Dharmalingaraja personally.
But, i can understand he has been a rare and ethical person, from your poem.
My deep condolences to his family.

Post a Comment