எல்லைக்குட்படாத
சிந்தனையின் விளிம்பில்..
எனக்குள் ஏற்பட்ட
இடைவெளியை நிரப்ப
வார்த்தைகளையும்..
இன்னபிற..
பொருள் தரும்..
குறிப்பறிவித்தல்களையும்..
தேடித்.. தேடியே..
கழிகிறது காலம்.
சமயங்களீல்
சொல்லப்படாத வார்த்தைகளை மீறி..
உணர்வுகளில் நனைகிறேன் நான்.
உதடுகளில்.. ஊனமும்..
மொழி பேசத் துடிக்கும்
உதடுகளும் என..
பெருமூச்சில் கலந்து..கரைகிறது..
எனது எல்லையற்ற சிந்தனை
நான் பேச நினைப்பதெல்லாம்..
என் மாணவர்களில்
யாரோ ஒருவர்
என்றோ ஒரு நாள்
பேசக்கூடும்..
கேட்கக் கூடுமோ?..... "நான்."
1 comment:
நிச்சயமாக கேட்ககூடும் வெகு விரைவில்.
Post a Comment