Total Pageviews

Friday, April 22, 2011

அரவிந்திற்கு விடுமுறை




ஒரு ஏட்டில் எழுதப்பட்ட நான்கு வரிகள் 
உரக்க வாசித்தப்பின்
உயிர் பெறுகிறது இறந்துபோன மயிர்களும்
"நாளை முதல் ஜூன் 1 வரை முழு 
ஆண்டுத் தேர்வு விடுமுறை" !


கேள்வியே புரியாதவன் 
வேகவேகமாய் கிறுக்குகிறான்
கேள்விகளுக்கு விடைத் தெரிந்தவன் போல 


கடைசி பரிட்சையின் விடைத்தாளில் 
கடைசி வரியில் முற்றுபுள்ளி வைத்துவிட்டு பெருமூச்சு
எவரெஸ்ட் மலை உச்சியில் கொடி நட்டவன் விட்ட அதே மூச்சு !


விடைத்தாளை வாத்திச்சி கையில் விட்டெறிந்துவிட்டு !
காலடி எடுத்து வைக்கிறான் 
அவன் ஒரு வருடமாய் சிறை பட்டுக் கிடந்த 
வகுப்பறையை விட்டு 

புத்தகங்களின் பக்கங்கள் பறக்கிறது !
இதழ்களில் புன்னகைகள் தெறிக்கிறது !


இவர்கள் விடுதலை கொடுத்த பேனா மையும் 
இவர்களை குஷிப் படுத்துகிறது 
அடுத்தவன் சட்டையில் கோலமிட்டு !


போட்டிப் போட்டு படிக்காதக் கூட்டம் 
போட்டிப் போட்டு சந்தோஷப் படுகிறது !


போதாக்குறைக்கு ஒருவன் 
சட்டை வேற கிழிந்து தொங்குகிறது 
இவர்களை இன்னும் சிரிக்க வைக்க !


கை, கண், கால், வாய் என 
உடம்பே சிரிக்கிறது !


வருடத்தில் ஒரு முறை வரும் 
இந்த காட்ச்சியைப் பார்க்கத்தான் 
ஏழைச் சூரியனும் பூமியில் தரை இறங்க முயற்சிக்கிறான் 
இதை உணர்த்துகிறது
கோடை வெயில் !

இதை பலர் புரிந்து கொள்வதில்லை 
என்பதனால் கண் கலங்குகிறது 
கோடை மழையாய் !

1 comment:

Yoga Yuva Kendra said...
This comment has been removed by the author.

Post a Comment