தியானம் கற்க விரும்பிய ஒரு மாணவன் அவனது குருவைப் பார்க்கச் சென்றான்.
”ஐயா, நான் தியானம் கற்க விரும்புகிறேன். நான் அதில் முதல்வனாகத் திகழ எத்தனை நாட்கள் ஆகும்?” என்று கேட்டான்.
குரு சொன்னார்: “10 வருடங்களாகும்” .
பொறுமையிழந்த மாணவனோ ” நான் இன்னும் வேகமாகக் கற்க விரும்புகிறேன். அதற்காக என் கடின உழைப்பைக் கொடுக்கத் தயாராயிருக்கிறேன். தினமும் பத்து மணி நேரமோ அதற்கு மேலும் கூடவோ பயிற்சி எடுப்பேன். அப்படி செய்தால் எத்தனை மணி நேரமாகும்?” என்று கேட்டான்.
சற்று யோசித்த குருவோ சொன்னார்: “20 வருடங்களாகும்”
No comments:
Post a Comment