Total Pageviews

Tuesday, February 22, 2011

மனநோய் பைபிள்


இந்த முறை திருவண்ணாமலை சென்றிருக்கும்போது மருத்துவ நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு "பயங்கரச் செய்தி" நமது மொபைல் போனில் ஏராளமான பாக்டீரியாக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கிறதாம். நமது கழிவறையில் இருப்பதை விட நமது மொபைல் போனில் இருக்கும்` கிருமிகளின் எண்ணிக்கை, அதிகமாம்! ,
(இனி ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பேச வேண்டும் போல)

 மற்றொரு படு பயங்கரச் செய்தி நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிருமிகள், டாய்லெட்டில் இருப்பது போல பத்து மடங்காம். கீ போர்டைத் தொட்ட விரல்களைத் தெரியாத்தனமாக வாயில் வைத்து விட்டால் ஃபுட் பாய்சனிங்தானாம். இந்த வயிற்று வலிக்கு "க்வெர்ட்டி டம்மி" என்று நாகரீகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்களாம். (இப்ப தான பிளாக் எழுத ஆரம்பிச்சோம் அதுக்குள்ளேவா?.)
 டாய்லெட் ஸீட்டை விட அதிகமான கிருமிகள் நம் டூத் ப்ரஷ்ஷிலும் இருக்கிறதாம். இனி பழையபடி வேப்பங்குச்சிகளுக்கு கிராக்கி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இனி டூத் ப்ரஷ்ஷில் பல் தேய்க்கவா? வேண்டாமா?என யோசித்துக்கொண்டிருக்கும் போதே,  மனோதத்துவ டாக்டர்களிடமிருந்து மற்றொரு செய்தி, குழந்தைகள் லேஸ் வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிப்பது முதல், என்றோ ஒரு நாள் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தில் அவஸ்தைப் படுகிறோமே அது வரை,  அனைத்துமே மனோ வியாதி என்றே இந்த மருத்துவர்களால் அடையாளம் காட்டப்படுகிறது.

அமெரிக்காவின் மனோதத்துவ வைத்தியர்கள் கழகம் வெளியிடக்கூடிய ஒரு முக்கியமான புத்தகம் DSM. ,  மன நோய் வைத்தியத்திற்க்கான பைபிள் என்று இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறதாம். வியாதிகளின் அறிகுறிகள்,அதைப் பற்றிய விவரங்கள், எப்படி எடுத்துச் சொன்னால் நோயாளியைப் பயமுறுத்தலாம் என்று சகல தகவல்களும் அடங்கிய புத்தகம்.  வெளிவர இருக்கும் இதன் ஐந்தாம் பதிப்பில் ஏகப்பட்ட புதிய வியாதிகள் சேர்க்கப்படவிருக்கின்றனவாம்.
உதாரணமாக, நமக்கு பிடித்தவர்களை நீண்ட நாள் பார்க்காமல் திடீரென பார்க்கும்போது வரும் படபடப்புக்கு ‘மைல்ட் ஆங்ஸைட்டி டிப்ரஷன்’ என்று பெயராம். நமக்குப் பிடித்தவர்களிடம் செல்லச்சண்டைப் போட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து மீண்டும் போன் வராதா எனக் காத்துக் கொண்டிருப்போமே! - இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’.என்று பெயராம். எல்லாவற்றையும் விட மோசமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவதாம்.பயப்படாதிங்க! இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான்!
இந்த மன நல பைபிளின்படி பார்த்தால் இனி நானும் நீங்களும் பைத்தியந்தான். கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், கார்டிஃப் பல்கலைக் கழகம் போன்றவற்றின் மனோ தத்துவப் பேராசிரியர்களே இதைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்குப் ‘பைத்தியம்’ என்று அடையாளப் படுத்திவிட்டால் அப்புறம் இயல்பான மனிதர்களின் எண்ணிக்கையே மிகச் சுருங்கிவிடும் என்கிறார்கள் இந்தப் பேராசிரியர்கள்.
 இனி மெடிக்கல் செக்கப் எனப்போனால் நமக்கு பைல்ஸ் உண்டா, சர்க்கரை வியாதி உண்டா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, கடைசியில் ‘உனக்குக் கோபம் வருவதுண்டா ?’ என்று கேட்பார்களாம். ஆமாம் என்று சொன்னால் போச்சு - டெம்ப்பரமண்ட்டல் கண்ட்ரோல் டிஸார்டர் என்ற நோயின் பெயர் சொல்லி பீஸை ஏகத்துக்கு ஏற்றிவிடுவார்களாம்.. தொடர்ந்து நோய் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்றால் அதற்கான சிகிச்சையை ஒழுங்காகச் செய்துகொள்ள வேண்டுமாம். டிஸார்டரைக் கட்டுப்படுத்த தினம் மூன்று வேளை குழாய் மாத்திரைகள், ஒவ்வொன்றின் விலை ரூபாய் எண்பதாம்!

DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்களாம். நமக்கு பிடித்தவர்கள் வேறு யாரிடமாவது பேசினால் நமக்கு ஒரு சின்னப் பொறாமை வருமே
அதற்குதான் இந்தப்பெயர். (அய்யய்யோ...........இந்த நோய் நமக்கு உண்டா?. நமக்கும் கொஞ்சம் பொறாமை இருக்கே!)
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்களாம்.. ஒரு கால கட்டத்தில் அமெரிக்காவில்ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியதாம்.

.குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை,DSM பரிந்துரைக்கிறது.  2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்காம்.
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் மருந்தை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு.
பல்லி மிட்டாய் கேட்டுக் குழந்தை அழுதால் அது ஒரு மன வியாதி. மனைவி ஏதோ கடுப்பில் வெண்கலப் பானையை ‘ணங்’கென்று இறக்கி வைத்தால் அது ஒரு வியாதி… இப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போய்க் களைத்துப் போன மனநல மருத்துவர்கள் இப்போது மற்றொரு அருமையான வியாதி சொல்லியிருக்கிறார்கள்: ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கூட ஒரு வகை மன நோயாம்.
உண்மை! விளையாட்டுக்குச் சொல்லவில்லை! இந்த வியாதிக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா’ என்று பெயர். இந்த நோயாளிகள் எண்ணெய் பலகாரங்களைச் சாப்பிட மாட்டார்கள். இனிப்பு, கொழுப்பு, உப்பு உறைப்பைக் கூடிய வரையில் தவிர்ப்பார்கள். டால்டா, மைதா, பிஸா, சிப்ஸ் போன்ற "நல்ல உணவுகளை!" எல்லாம் தவிப்பார்களாம்.. பச்சைக் காய்கறிகள், பழங்கள், கைக் குத்தல் அரிசி போன்ற "மோசமான உணவுகளை"! தாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுப்பார்களாம்.
இதெல்லாம் ஒரு வகை மன வியாதியாம். ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா! (பெயர் நல்லா இருக்கே!)
  அதிகமான பூச்சி மருந்து தெளித்தக் காய்கறிகள், மரபணு செய்யப்பட்ட பயிர்களை விலக்கி வைத்தால் நாமெல்லாம் பைத்தியமாம்!ஆக்ஸிடோஸின் ஊசி போட்டுக் கறந்த பாலைக் குடிக்க மறுத்தால் நாமும் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆக வேண்டியதுதானாம்!
செயற்கை ரசாயனங்களில் ஊற வைத்து மாதக் கணக்கில் டப்பாவில் அடைத்து வைத்த உணவைச் சாப்பிட்டால்தான் நார்மலான மனிதன் என்று DSM மருத்துவர்கள் வாதாடுகிறார்கள்.
இயற்கையான, உயிரோட்டமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் தான் உடலும் மனமும் லேசாக இருக்கும். தன்னம்பிக்கையும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். ஆன்மீக உணர்வுகள் மேலே எழும்பும். மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் டப்பா உணவு சாப்பிட்டுக்கொண்டு சரிந்து கிடப்பவர்கள், சோம்பலும் மந்தத்தனமுமாகத்தான் இருப்பார்கள். இவர்கள் தான் DSM மனிதர்களாகப் போகிறார்கள்.

"பித்தம் இல்லாது சித்தம் கெடாது"



முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்,
எப்பிணி தீர்ப்பாரடி - குதம்பாய்
எப்பினித் தீர்ப்பாரடி ............குதம்பைச்சித்தர்.

3 comments:

abarnavijay said...

thanks master .today ,really iam very happy and proud to be an indian and your student.
If I were to be in america ,I would have read this "DSM" book and gone to a "DSM" doctor,he would have listed some 2000 disorders and diseases and suggest with some 100's of tablets.
Thanks god,you really saved me

தகிடுதத்தம் said...

மனிதனின் ஒவ்வொரு சாதாரண மனப்பிறழ்வுகளையும் நோய் என்று பட்டியலிடுவது, அதைக்குணமாக்குகிறேன் என்று மருத்துவருக்கு பணத்தை தாரைவார்ப்பது இதெல்லாம் கார்ப்பரேட் நாடுகளுக்கு சாதாரணமாயிருக்கலாம். பதஞ்சலியும், திருமூலரும் தோன்றிய நாட்டில் இதற்கெல்லாம் எந்த அவசியமுமில்லை என்றே தோன்றுகிறது. பல அரிய விபரங்களைக் கொண்ட உபயோகமான பதிவு.

suganya shankar said...

Sir,
Very nicely said about the facts of ADHD and other mental disorders.

I was checking about ADHD diagnostic features and it has not been mentioned about the jealousy symptom as one of the main diagnostic criteria, have also checked with one of my friend who is a child psychiatrist and she said the same and mentioned that it might be a very minor symptom which is mentioned in DSM book.

I sincerely apologise if I had said anything wrong.

Regards

Shankar Ganesh

Post a Comment