கனவுகள் சுமக்கும் சுமை தாங்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது
உடல் என்று பெயரிட்டு
ஒற்றை மனிதனுக்கு ஆயிரம் பெயர்கள் நேற்று .
பணத்தினால் ஒன்று,
பதவியினால் ஒன்று
பாசத்தினால் ஒன்று,
கோபத்தினால் ஒன்று
சாதனையினால் ஒன்று,
சண்டையினால் ஒன்று
அத்தனையும் மாறிப்போனது
இறந்துபோன சில நொடிகளில்
நெற்றியில் ஒட்டிவைத்த அந்த ஒற்றை நாணயத்தால்!
"பிணமென்று"
No comments:
Post a Comment