Sir, இன்று நெறைய பேர் சிசேரியன் விரும்பி செய்கிறார்களே... பிரசவ வலி இல்லை, இரண்டு நாள் tour போறமாதிரி ஆஸ்பத்திரி போயிட்டு வந்திடுறாங்க. இது சரிதானா? விளைவுகள் தான் என்ன? S. ARAVIND
அமெரிக்காவிற்கும், ஈராக்கிற்கும் சண்டை வரக்கூடிய சூழல் உண்டானபோது சண்டை வந்து விட்டால் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காதே என்பதற்காக ஏராளமான பெண்கள் சிசேரியன் செய்து கொண்டார்கள் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். அதுபோல 2௦௦௦ ஆண்டு முடிந்து புதிய நூற்றாண்டு பிறக்கிற நேரத்தில் தனது குழந்தை பிறக்க வேண்டும் என்கிற நோக்கில் உலகம் முழுக்க சிசேரியன் செய்து கொண்டவர்கள் அதிகம்.
ஆனால் நமது நாட்டில் எந்த காரணமும் இன்றி சிசேரியன் அதிகரித்து வருவது வருந்தத்தக்க விஷயமாகவே இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 15 சதவீதத்திற்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் தேவை இல்லை என உலக சுகாதார மையம் கூறிய போதும் இந்த குறிப்பிட்ட அளவை விட ஏழுமடங்கு அதிகமான சிசேரியன் நடை பெறுவதாக ஆய்வுகள்தெரிவிக்கின்றன.
அதிலும் நம்ம தமிழ் நாட்டில் அதிகமான சிசேரியன் நடைபெறுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அரவிந்த் கூறியதுபோலஇரண்டு நாள் டூர் போயிட்டு வருவது போல சிசேரியன் பண்ணிட்டு வந்துடுறாங்க. ஆனால் இதனோட பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை.
மனித உடல் மிகவும் சூட்சுமமாக செய்யப்பட்ட இயந்திரம். இந்த இயந்திரத்தில் உள்ள நரம்புகள் மட்டுமே நவீன கால மருத்துவத்திற்குத் தெரிந்திருக்கிறது. இதற்கும் மேலாக பிராண சக்தியைக் கொண்டு செல்லக் கூடிய நாடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்பட வேண்டும். நமது சித்தர்களும், யோகிகளும் இந்த நாடிகளைப் பற்றிக் கூறும்போது மேலை நாட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம், நரம்புகளைப் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துகொள்ள MRI Scan இருப்பது போல நாடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள மருத்துவ கருவிகள் இல்லாமல் இருந்ததே. ஆனால் சமீப காலத்தில் கிரிலியன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டக் கருவியால் நாடிகளையும் படமெடுக்க முடிகிறது . இந்த கருவியால் படமெடுக்கும்போது நாடிகள் மட்டுமல்லாது நமது யோகிகள் கூறிய யோகச்சக்கரங்களையும் பார்க்க முடிகிறது.
(KRILIAN PHOTOGRAPHY)
நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது.
(இருப்பான தேகம் எழுபத்திரண்டாயிரமான நாடிதனில்,
ஏலப்பெரு நாடி ஒக்கத் தசமத் தொழிலை
ஊக்கத் தசவாயுக்கள் தக்கபடியானதே சார்பு.- அகஸ்தியர் )
இந்த நாடிகளில் முக்கியமான நாடியாக சுழுமுனை நாடி சொல்லப்படுகிறது.
சுழுமுனை நாடியிலிருந்தே பிற நாடிகளுக்கு vital energy எனச் சொல்லக்கூடிய பிராண சக்தி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த சுழுமுனை நாடியே உடல் உள்ளுறுப்புகளுக்குப் பிராண சக்தியை வழங்கக்கூடிய முக்கியமானஓடுபாதை .
சுழுமுனை நாடி உடலின் மையத்தில் முன்னும் பின்னுமாகச் செல்கிறது(REN channel, DU channel) இதனை போகமஹரிஷியால் கற்றுக்கொடுக்கப்பட்ட சீன வைத்தியமும் ஏற்றுக்கொள்கிறது. சிசேரியன் செய்யும்போது இந்த முக்கியமான நாடி வெட்டப்படுகிறது. இதன் காரணமாக மண்ணீரல்(sp12, sp13)., கிட்னீ,(ki12, ki13) பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளுக்குச் செல்லக்கூடிய பிராண ஒட்டப்பாதை தடை செய்யப்படுகிறது.
இதன் தொடர்விளைவுகள் என்னவென்று பார்ப்போமா!
மண்ணீ ரலுக்குச் சக்திக்குறைவு ஏற்படும்போது, மண்ணீரலின் விஷேச குணமான "பிடித்து வைக்கும் தன்மை" குறைகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகிறது. குடல் இறக்கம், மூலம், உதரவிதான இறக்கம், கர்ப்பப்பைஇறக்கம் , போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
கிட்னியின் சக்திக்குறைவால் அடி முதுகு வலி ஏற்படலாம். நரம்புகளிலும் எலும்புகளிலும் கால்சியத்தின் அளவு குறையலாம். செவித்திறன் குறையலாம். பித்தப்பையின் சக்திக்குறைவினால் உடம்பில்அளவுக்கதிகமான கொழுப்புப்படிமம் ஏற்படலாம். நமது உடலில் தசை நார்களின் கட்டுப்பாடு பித்தப்பையில் இருப்பதால் தசை நார்களின் ஆற்றல் குறையலாம். இத்தனை சிரமங்களையும் ஏற்றுக்கொண்டு சிசேரியன் தேவையா?
சிஷேரியனுக்கு மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை தான் முக்கிய காரணம் என்று சொல்வதை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தைபெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.
இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது செல்வச் செழிப்பின் ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்)..
இன்னொரு முக்கியமான செய்தி, ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்து சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.
இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுகிறது .
இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .
சிலநேரங்களில், தவிர்க்க முடியாத காரணங்களால் சிசேரியன் தவிர்க்க முடியாது தான். குழந்தையின் தலை திரும்பாத நேரங்களில் சிசேரியன் தவிர்க்க முடியாது. ஆனாலும் இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருக்கத் , துவிபாதபீடம் நல்லமருந்து. இடம் மாறியுள்ள சிசுவை சரியான நிலைக்குத் திருப்பிவிடுவதற்குத் துவி பாத பீடம் , வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளது. முதல் இரண்டு மாதங்கள் துவிபாதபீடம் செய்பவர்களுக்கு சிசேரியன் செய்யத்தேவையில்லை என்பதை என்னால் உத்திரவாதத்துடன் உறுதிகூறமுடியும்.குழந்தை கொடி சுற்றி பிறக்கிறது என்று சொல்கிறார்களே, இந்த நிலையையும் துவி பாதபீடம், உத்தான பாதாசனா, பூரண தித்திலிகிரியா சரிசெய்யும்.
நண்பர்களே! மற்றொரு பதிவில் சிசேரியனுக்கான காரணங்களையும், தவிர்க்கும் வழி முறைகளையும் பற்றிப் பார்ப்போம்
10 comments:
மிகவும் பயனுள்ள செய்தி ,மிக்க நன்றி மாஸ்டர் .
தவிர்க்க முடியாத காரணத்தால் செய்யும் சிசேரியநாள் ஏற்படும் விளைவுகளில் இருந்து விடுபட என்ன வழி ,அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் மாஸ்டர் .தயவு கூர்ந்து சொல்லவும்
இப் பதிவிர் காண முயற்ச்சி, ஆராய்ச்சி, அனுபவம் கண்டு வியப்பு அடைகிரியன்! தங்களை சந்தித்தது என் பாக்கியம். இப் பதிவின் தொடரை படிக்க ஆர்வம மட்டுமே என்னிடம் இருக்கிறது.
nowadays removal of uterus is common, is cesarean a cause for that ??? Hari ganesh
Informations are very useful, Pls provide more informations
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி உமா
வணக்கம் அய்யா,
துவிபாதபீடம் என்றால் என்ன? இவை யோகா முறைகளா ?
Thanks
Rajasimhan
வணக்கம் ராஜசிம்மன், தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி,
துவி பாத பீடம் என்பது ஒரு யோக ஆசன முறை, இதனை கந்தராசனம், எனவும் சேது
பந்தாசனத்தின் ஒரு மாற்று வடிவம் எனவும் கூறலாம். இது லாமாக்களின் யுக்தி
முறைகளில் ஒரு முக்கியமான பயிற்சிமுறை.
Respected Sir
Is there a link explaining about Thuvi Pada beedam? I tried googling but could not find any.
thanks
Rajasimhan
Respected Sir
Is there a link explaining about Thuvi Pada beedam? I tried googling but could not find any.
thanks
Rajasimhan
Post a Comment